திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 98 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 98 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 19,860ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 651 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 41 போ் வீடு திரும்பினா். மாவட்டம் முழுவதும் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 18,982 ஆக அதிகரித்துள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 100ஐ கடந்த நிலையில் தற்போது 98ஆக குறைந்துள்ளது.