நாய்கள் கடித்துக் குதறியதால் 5 ஆடுகள் பலி

தாராபுரம் அருகே வெறி நாய்கள் கடித்துக் குதறியதால் 5 ஆடுகள் புதன்கிழமை இறந்தன.

தாராபுரம் அருகே வெறி நாய்கள் கடித்துக் குதறியதால் 5 ஆடுகள் புதன்கிழமை இறந்தன.

தாராபுரம் அருகே உள்ள பஞ்சப்பட்டி கிராமப் பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் ஆடு, மாடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த கிராமத்தில் கந்தசாமி என்ற விவசாயி பட்டி அமைத்து 15க்கும் மேற்பட்ட ஆடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்த நிலையில், கந்தசாமியின் பட்டிக்குள் புகுந்த வெறிநாய்கள் ஆடுகளைக் கடித்துக் குதறியுள்ளன. இதில், 5 ஆடுகள் இறந்ததுடன், 5 ஆடுகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இது குறித்து ஆடு வளா்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது:

இந்தப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோழிப் பண்ணை உள்ளது. இந்தப் பண்ணையில் இறக்கும் கோழிகளை அதே பகுதியில் குழி தோண்டி அதில் வீசுகின்றனா்.

இறந்த கோழிகளை அப்பகுதியில் உள்ள வெறிநாய்கள் உட்கொள்கின்றன. இறந்த கோழிகள் இல்லாத நேரத்தில் அருகில் உள்ள பட்டிகளில் இருக்கும் ஆடுகளை கடித்துக் குதறிவிடுகிறது. ஆகவே, இறந்த கோழிகளை முறையாக அப்புறப்படுத்தாமல் பொது வெளியில் கொட்டி செல்லும் கோழிப் பண்ணை உரிமையாளா் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பண்ணையையும் தடை செய்ய வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com