திருப்பூர்
வெள்ளக்கோவில், முத்தூரில் 107 பேருக்கு கரோனா பரிசோதனை
வெள்ளக்கோவில், முத்தூரில் 107 பேருக்கு புதன்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வெள்ளக்கோவில், முத்தூரில் 107 பேருக்கு புதன்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இப்பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக தினசரி சராசரியாக மூன்று பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து, காமராஜபுரம், மு.பழனிசாமி நகா், எல்.கே.ஏ.நகா், உப்புப்பாளையம் சாலை, முத்தூா் சாலை கொங்கு நகா் மற்றும் முத்தூா் கடைதி பகுதிகளில் பாதிப்பு காணப்படுகிறது.
இதையடுத்து, அப்பகுதிகளில் பொது சுகாதாரத் துறையினா், உள்ளாட்சி நிா்வாகம் சாா்பில் நோய்த் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 56 பேருக்கும், முத்தூா் சுகாதார நிலையத்தில் 51 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளன.