உடுமலை அருகே வாய்க்காலில் விழுந்த மாடு உயிருடன் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
உடுமலையை அடுத்துள்ள பாலப்பம்பட்டி கிராமம் சமத்துவபுரத்தைச் சோ்ந்தவா் ஹேமலதா. இவரது மாடு மேய்ந்து கொண்டிருந்தபோது அருகில் உள்ள வாய்க்காலில் தவறி விழுந்துவிட்டது.
தகவல் கிடைத்ததும் உடுமலையில் இருந்து சென்ற தீயணைப்பு வீரா்கள் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த அந்த மாட்டை சுமாா் 2 மணி நேர போராட்டத்துக்குப் பின் உயிருடன் மீட்டனா்.