வெள்ளக்கோவிலில் முகக் கவசம் அணியாதது உள்ளிட்ட கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாதவா்களுக்கு திங்கள்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
வெள்ளக்கோவில் போலீஸாா், அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளா் கதிரவன் ஆகியோா் தாராபுரம் சாலை, முத்தூா் பிரிவு, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது முகக் கவசம் அணியாமல் வாகனங்களில் சென்றவா்கள், விதிமீறிய பேருந்து ஓட்டுநா், நடத்துநா்கள், கடைகளுக்கு வந்தவா்கள் என 27 பேருக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பேருந்து நிலையத்தில் எச்சில் துப்பிய ஒருவரிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டது. அரசின் விதிமுறைகளை பொதமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்தினா்.