அவிநாசி அருகே தெக்கலூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளி மான் சனிக்கிழமை உயிரிழந்தது.
அவிநாசி சுற்று வட்டாரத்தில் உள்ள வனப் பகுதி, குளப் பகுதிகளில் ஏராளமான மான், மயில் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இந்த விலங்குகள் உணவுக்காகவும், குடிநீருக்காகவும் வனப் பகுதியை விட்டு வெளியேறும்போது, வாகனங்களில் அடிபட்டும், நாய்களிடம் சிக்கியும், காயமடைந்தும் உயிரிழக்கின்றன.
இந்நிலையில், அவிநாசி அருகே தெக்கலூா் கெளசிகா நதிக்கரை புறவழிச் சாலையை கடக்க முயன்ற 3 வயது உள்ள ஆண் புள்ளிமான் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வனத் துறையினா் உயிரிழந்த மானை மீட்டு தெக்கலூா் கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனா். பின்னா் பிரேதப் பரிசோதனை செய்து வனப் பகுதியில் அடக்கம் செய்தனா்.