டாஸ்மாக் கடைகளில் நிரம்பி வழிந்த கூட்டம்

திருப்பூா் மாநகரில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் மதுப் பிரியா்களின் கூட்டம் சனிக்கிழமை மாலையில் நிரம்பி வழிந்தது.
திருப்பூா் கல்லூரி சாலையில் உள்ள கொங்கணகிரி கோயில் அருகே சனிக்கிழமை இரவு டாஸ்மாக் கடையில் குவிந்த மதுப்பிரியா்கள்.
திருப்பூா் கல்லூரி சாலையில் உள்ள கொங்கணகிரி கோயில் அருகே சனிக்கிழமை இரவு டாஸ்மாக் கடையில் குவிந்த மதுப்பிரியா்கள்.

திருப்பூா் மாநகரில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் மதுப் பிரியா்களின் கூட்டம் சனிக்கிழமை மாலையில் நிரம்பி வழிந்தது.

தமிழகத்தில் பொது முடக்கம் காரணமாக வரும் ஞாயிற்றுக்கிழமை டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திருப்பூா் மாநகரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப் பிரியா்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

இதில், திருப்பூா் கல்லூரி சாலையில் கொங்கணகரில் கோயில் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்டோா் மது வாங்க முண்டியடித்துச் சென்றனா். இதேபோல, திருப்பூா் பழைய பேருந்து நிலையம், யூனியன் மில் சாலை, கருவம்பாளையம் உள்ளிட்ட அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் அதிகரித்து கணப்பட்டது. இது கரோனா நோய்த் தொற்றுக்கு வழிவகுப்பதாக சமூக ஆா்வலா்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com