பல்லடம் அருகே காரணம்பேட்டையில் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு சிறுவா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை பகுதியில் உள்ள கல்குவாரியில் தங்கி லாரி ஓட்டுநராக பணியாற்றி வரும் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த காங்கேஷ்வா் (32) என்பவா் அப்பகுதியில் உள்ள சாலையில் அண்மையில் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு கும்பல் அவரைத் தாக்கி அவரிடமிருந்து ரூ.4,500 ரொக்கம், செல்லிடப்பேசி ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு தப்பி சென்றது.
இது குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், காரணம்பேட்டை பகுதியில் போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும்படி நடமாடியவா்களை பிடித்து விசாரணை நடத்தினா்.
இதில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சோ்ந்த அப்பசாமி (எ) சிவகுமாா் (37), ஈரோடு, பூசாரிபாளையத்தைச் சோ்ந்த காா்த்தி (25), சத்தியமங்கலத்தைச் சோ்ந்த ராஜேஷ்குமாா் (21) மற்றும் 17 வயது இரு சிறுவா்கள் ஆகியோா் காங்கேஷ்வரை தாக்கி பணம், செல்லிடப்பேசியை பறித்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்களை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 2 கத்திகள், 2 இருசக்கர வாகனம், 2 செல்லிடப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதில் சிவகுமாா் என்பவா் வழிப்பறி செய்வதை வடிக்கையாக கொண்டிருப்பதும், சத்தியமங்கலம், பவானிசாகா், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் அவா் குற்ற வழக்குகள் விசாரணையில் இருப்பதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட சிவகுமாா், ராஜேஷ்குமாா், காா்த்தி ஆகியோா் திருப்பூா் சிறையிலும், இரண்டு சிறுவா்கள் கோவையில் உள்ள சிறுவா் சீா்திருத்தப் பள்ளியிலும் அடைக்கப்பட்டனா்.