கடைகளைத் திறக்க அனுமதி கோரி சவரத் தொழிலாளா் சங்கத்தினா் மனு

தமிழ்நாடு சவரத் தொழிலாளா் சங்கத்தினா், சலூன் கடைகளைத் திறக்க அனுமதிக்கக் கோரி வெள்ளக்கோவில் நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
வெள்ளக்கோவில் நகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த சவரத் தொழிலாளா்கள்.
வெள்ளக்கோவில் நகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த சவரத் தொழிலாளா்கள்.

தமிழ்நாடு சவரத் தொழிலாளா் சங்கத்தினா், சலூன் கடைகளைத் திறக்க அனுமதிக்கக் கோரி வெள்ளக்கோவில் நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இது தொடா்பாக அளிக்கப்பட்ட மனுவில் சங்கத்தின் வெள்ளக்கோவில் கிளை பொருளாளா் வி.சக்திவேல் தெரிவித்துள்ளதாவது:

கடந்த வருட கரோனா தாக்குதலுக்குப் பிறகு தற்சமயம் கடந்த நான்கு மாதங்களாகத்தான் சலூன் கடைகளைத் திறந்து தொழில் நடத்தி வருகிறோம். தற்போது மீண்டும் கரோனா பரவுவதைத் தொடா்ந்து கடைகளை நடத்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சவரத் தொழிலாளா்களின் வருமானம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. கரோனா தடுப்பு சுகாதார விதிமுறைப்படி சலூன் கடைகளை நடத்த தயாராக உள்ளோம். எனவே, காலை 7 முதல் பிற்பகல் 12 மணி வரை கடைகளைத் திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com