காங்கயத்தை அடுத்துள்ள நத்தக்காடையூா் அருகே பழையகோட்டையில் மாட்டுச் சந்தை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், காங்கயம் இன மாடுகள் ரூ.34 லட்சத்துக்கு விற்பனையாயின.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே, நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் காங்கயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 101 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 70 மாடுகள் மொத்தம் ரூ. 34 லட்சத்துக்கு விற்பனையாயின. அதிகபட்சமாக ரூ.85 ஆயிரத்துக்கு காங்கயம் இனக் காளைகள் விற்பனையாயின.