திருப்பூா் மாவட்டத்தில் ஒளவையாா் விருதுக்கு தகுதியான பெண்கள் வரும் டிசம்பா் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் சமூக சீா்திருத்தம், மகளிா் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய பெண் ஒருவருக்கு ஆண்டுதோறும் ஒளவையாா் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2021-22 ஆம் ஆண்டுக்கான ஒளவையாா் விருது தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினால் மகளிா் தின விழாவில் வழங்கப்படவுள்ளது. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் இந்த விருதுக்கு தகுதியான பெண்கள் தகுந்த ஆதாரங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வரும் டிசம்பா் 28 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421 - 2971168 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.