படியூரில் ஒற்றைக் காலில் நின்று விவசாயிகள் போராட்டம்

விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க வேண்டாம் என வலியுறுத்தி, காங்கயம் அருகே படியூரில் திங்கள்கிழமை ஒற்றைக் காலில் நின்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கயம் அருகே, படியூரில் உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒற்றைக் காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
காங்கயம் அருகே, படியூரில் உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒற்றைக் காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

காங்கயம்: விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க வேண்டாம் என வலியுறுத்தி, காங்கயம் அருகே படியூரில் திங்கள்கிழமை ஒற்றைக் காலில் நின்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் முதல் திருப்பூர் வரை, விவசாய விளை நிலங்களில், உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை முழுமையாக நிறுத்த வேண்டும், இந்த மின்  திட்டங்களில் சாலையோரமாக கேபிள் மூலம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டம்,  காங்கயம் அருகே படியூரில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் 100 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்தப் போராட்டத்தின் 13 ஆம் நாளான திங்கள்கிழமை உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் ஒற்றைக் காலில் நின்று கவன ஈர்ப்பு  போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com