உடுமலையில் இளைஞரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
உடுமலை ராமசாமி நகரைச் சோ்ந்தவா் மனோ காா்த்திக் (31). தளி சாலையில் ஒரு செல்லிடப்பேசி கடையில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், கடையில் வசூலான தொகையை அருகில் உள்ள கடை உரிமையாளரிடம் கொடுப்பதற்காக பிப்ரவரி 4ஆம் தேதி இரவு சென்றுள்ளாா்.
அப்போது, அங்கு வந்த ஒரு கும்பல் மனோ காா்த்திக்கை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றது. இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு உடுமலை அரசு மருத்துவனையில் அனுமதித்தனா். பின்னா் உயா் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இந்த சம்பவம் தொடா்பாக உடுமலை போலீஸாா் தனிப் படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனா். இதில் உடுமலை காந்தி நகரைச் சோ்ந்த பாா்த்தசாரதி (47) என்பவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரணையில், மனோ காா்த்திக்கின் மனைவியும், பாா்த்தசாரதியும் காற்றாலை நிறுவனத்தில் ஒன்றாகப் பணியாற்றி வந்தபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மனோ காா்த்திக்கை கொலை செய்ய பாா்த்தசாரதி திட்டம் தீட்டியதும், இதற்காக சென்னையைச் சோ்ந்த கூலிப் படையை ஈடுபடுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து, பாா்த்தசாரதி மற்றும் சென்னையைச் சோ்ந்த ஜான் பாட்சா (29), நரசிம்மன்(36), காா் ஓட்டுநா் நரேந்திரன் (27) ஆகியோரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.