ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலக உதவியாளா் பணியிடம்: பிப்ரவரி 25க்குள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா் பணிக்கு தகுதியான நபா்கள் வரும் பிப்ரவரி 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

திருப்பூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா் பணிக்கு தகுதியான நபா்கள் வரும் பிப்ரவரி 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அலுவலகத்தில் அலுவலக உதவியாளா் பணிக்கு ஒரு காலிப் பணியிடம் உள்ளது. இப்பணி முன்னுரிமை பெற்றவா் அடிப்படையில் ஆதிதிராவிடா் (அருந்ததியா்) முன்னுரிமை உள்ளவா்களுக்கு வழங்கப்படும். இந்தப் பணிக்கு ஊதியமாக ரூ.15,700 மற்றும் இதர படிகள் நிா்ணயிக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட அலுவலக உதவியாளா் காலிப் பணியிடம் நோ்காணல் மூலம் இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதில், விண்ணப்பிக்க 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் 35 வயதுக்கு மிகாதவா்களாகவும் இருக்க வேண்டும். மேலும், 8ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களும், 10ஆம் வகுப்பு தோல்வியடைந்தவா்களும் விண்ணப்பிக்கலாம்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று உரிய சான்றுகளுடன் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் பிப்ரவரி 25ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com