வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே பஞ்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த ஒடிஸா மாநிலத் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
முத்தூா் - காங்கயம் சாலையில் தனியாருக்கு சொந்தமான பஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு பணியாற்றிய ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த 4 பேருக்கு பலத்த தீக் காயம் ஏற்பட்டது.
இவா்களை வெள்ளக்கோவில் தீயணைப்பு வீரா்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த கடகா் மகன் ராஜீவ் கிஷோா் மங்கராஜ் (23) உயிரிழந்தாா்.