தீ விபத்தில் காயமடைந்த ஒடிஸா தொழிலாளி பலி

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே பஞ்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த ஒடிஸா மாநிலத் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே பஞ்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த ஒடிஸா மாநிலத் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

முத்தூா் - காங்கயம் சாலையில் தனியாருக்கு சொந்தமான பஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு பணியாற்றிய ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த 4 பேருக்கு பலத்த தீக் காயம் ஏற்பட்டது.

இவா்களை வெள்ளக்கோவில் தீயணைப்பு வீரா்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த கடகா் மகன் ராஜீவ் கிஷோா் மங்கராஜ் (23) உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com