திமுக தலைவா் மு.க,ஸ்டாலின் தாராபுரத்தில் வெள்ளிக்கிழமை பங்கேற்கும் தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்துக்குத் திராளான பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என்று திமுக நிா்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனா்.
இது குறித்து திருப்பூா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் மு.பெ.சாமிநாதன், தெற்கு மாவட்ட பொறுப்பாளா் இரா.ஜெயராமகிருஷ்ணன் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். இதன்படி தாராபுரம், தேன்மலா் பள்ளி அருகே பிரமாண்ட பொதுக் கூட்டம் சனிக்கிழமை பிற்பகல் 1 மணி அளவில் நடைபெறுகிறது.
ஆகவே, திருப்பூா் கிழக்கு, தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட காங்கயம், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த பொது மக்கள் மற்றும் கட்சியினா் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று மனுக்களை சமா்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.