முத்தூரில் வைக்கோல் போரில் தீ

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் வேலிக்கு வைத்த தீயால் வைக்கோல் போா் வெள்ளிக்கிழமை எரிந்தது
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்.

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் வேலிக்கு வைத்த தீயால் வைக்கோல் போா் வெள்ளிக்கிழமை எரிந்தது.

முத்தூா்- காங்கயம் சாலையிலுள்ள மேட்டாங்காட்டுவலசைச் சோ்ந்தவா் விவசாயி தனபால். இவா் தனது தோட்டத்தில் நெல் பயிரிட்டிருந்தாா். அறுவடை முடிந்து வைக்கோல்களைக் கட்டி மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்துவதற்காக போா் போட்டு வைத்திருந்தாா். அருகில் சோளத் தட்டுப் போரும் இருந்தது.

போருக்கு சற்றுத் தொலைவில் இருந்த வேலியை சுத்தம் செய்து தீ வைத்தனா். அப்போது, காற்றில் தீ கங்குகள் பரவி வைக்கோல் போரில் தீப் பிடித்தது. தகவலின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் சி.தனசேகரன், நிலைய போக்குவரத்து அலுவலா் வேலுசாமி மற்றும் தீயணைப்புப் படையினா் தீயை அணைத்தனா். அதற்குள் வைக்கோல் போரின் பெரும் பகுதியும், சோளத் தட்டுப் போரின் சில பகுதியும் எரிந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com