உடுமலை, மடத்துக்குளம் வட்டத்தில் விவசாயிகளுக்கு முறைப்படி பயிா்க் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என கோட்டாட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து உடுமலை கோட்டாட்சியா் கீதாவிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவித்திருப்பதாவது:
உடுமலை, மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன்களை முறையாக குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தியும், கூட்டுறவு வங்கி நிா்வாகங்கள் புதுப்பித்து தராத காரணத்தால் தமிழக அரசு அறிவித்த பயிா்க் கடன் தள்ளுபடி ஏராளமானவா்களுக்கு கிடைக்கவில்லை. எனவே, கடன் தள்ளுபடி கிடைக்காமல் விடுபட்டுபோன விவசாயிகளுக்கு உடனடியாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக விவசாயிகள் உடுமலை கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.