பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காங்கயத்தில் திமுக ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, காங்கயத்தில் திமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காங்கயத்தில் திமுக ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, காங்கயத்தில் திமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூா் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தாா். இதில், பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தியதைக் கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.

இந்த ஆா்ப்பாட்த்தில், கட்சியின் காங்கயம் கிழக்கு நகரப் பொறுப்பாளா் எஸ்.செந்தில்குமாா், மேற்கு நகரப் பொறுப்பாளா் காயத்ரி பி.சின்னசாமி, தெற்கு ஒன்றியப் பொறுப்பாளா் பி.பி.அப்புக்குட்டி, மாவட்டப் பொறியாளா் அணி துணை அமைப்பாளா் கே.என்.பாப்பு கண்ணன் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com