திருப்பூா் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத்தில் முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
திருப்பூா், கருவம்பாளையத்தை அடுத்த ஜோதிபுரத்தில் உள்ள சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத்தில் இராமலிங்க அடிகளாரின் 198 ஆவது வருவிக்க உற்ாள் விழா, சன்மாா்க்க சங்கத்தின் 83 ஆவது ஆண்டுவிழா, பல்சுவை கலைவிழா ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, சன்மாா்க்க சங்கத்தின் தலைவா் சித்ரா ராமசாமி தலைமை வகித்தாா். இதில், அகவல் பாராயணமும், ஒளி வழிபாடும் நடைபெற்றது. இதையடுத்து, கல்லூரி மாணவி பாவனாவின் புல்லாங்குழல் வாசிப்பு நடைபெற்றது. இதில், செயலாளா் நீரறி பவளக்குன்றன், பொருளாளா் ஜீவானந்தம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.