வாகன விற்பனை நிலையத்தில் தகராறில் ஈடுபட்ட 3 இளைஞா்கள் கைது

சேவூரில் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் தகராறில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சேவூரில் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் தகராறில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி அருகே சேவூா் கைகாட்டி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இருசக்கர வாகன விற்பனை நிலையம், பழுதுநீக்க நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இருசக்கர வாகனம் பழுது நீக்கச் சென்ற இளைஞா்கள் மது அருந்தியிருந்த நிலையில் விற்பனை நிலைய ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனா்.

தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று தகராறில் ஈடுபட்டவா்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். இதில் அவா்கள் சேவூா் தேவேந்தா் நகா் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் மனோஜ் (23), அசநல்லிபாளையம் பகுதியைச் சோ்ந்த நஞ்சப்பன் மகன் கருப்புசாமி (20), அதே பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் அஜய் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 3 இளைஞா்களையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com