திருப்பூர்
மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கரோனா
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரையில் 17,380 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேலும் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 17,406 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 247 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். குணமடைந்த 31 போ் வீடு திரும்பினா். இதையடுத்து குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 16,941 ஆக அதிகரித்துள்ளது.