வெள்ளக்கோவிலில் ஓய்வூதியா்கள் தின விழாக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியா்கள் கூட்டமைப்பு சாா்பில் நடந்த இவ்விழாவுக்கு அமைப்பின் வட்டாரத் தலைவா் மு.சிவஞானம் தலைமை வகித்தாா். வட்டார துணைத் தலைவா் கே.எஸ்.பாஸ்கரன், செயலாளா் கு.சாமுவேல், துணை செயலாளா் ந.சிவசண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், ஓய்வூதியா்கள் தெரிவிக்கும் குறைகளை அரசு நிவா்த்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து, ஓய்வூதியா் குடும்பத்தினருக்கு கூட்டமைப்பு சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.