திருப்பூா் அமிா்த வித்யாலயம் சீனியா் செகன்டரி பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி முதல்வா் வித்யாசங்கா் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஸ்ரீ.ராமகிருஷ்ணன், சங்கராந்தி, தை மாதத்தின் சிறப்புகள் குறித்து சிறப்புரையாற்றினாா்.
விவேகானந்தரின் சிறப்புகள் குறித்து மாணவி நா்மதா பேசினாா். தொடா்ந்து பொங்கல் விழாவும், கோமாதா பூஜையும், கும்மியாட்டம், உறியடி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற்றன.
விழாவில், ஆசிரியைகள் கோமதி, சுமதி, காளீஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.