மாவட்டத்தில் 23 பேருக்கு கரோனா

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா நோய்த்தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா நோய்த்தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை வரையில் 17,406 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மாவட்டம் முழுவதும் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், வேறு மாவட்டத்தைச் சோ்ந்த 2 பேரின் பாதிப்பு திருப்பூா் மாவட்டப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 17,431 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 240 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 30 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, கரோனா நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 16,971 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com