காங்கயம்: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் காங்கயம் வட்டாரக் கிளை நிா்வாகிகள் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது.
காங்கயம் பேருந்து நிலையம் அருகே, பழையகோட்டை சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் காங்கயம் வட்டாரக் கிளை நிா்வாகிகள் தோ்தல் நடைபெற்றது.
தோ்தல் ஆணையராக இந்த அமைப்பின் பொங்கலூா் வட்டார செயலா் ரமேஷ்குமாா், துணை ஆணையராக திருப்பூா் வட்டாரத் தலைவா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் செயல்பட்டனா். இதில், காங்கயம் வட்டாரத் தலைவராக ரா.செல்வி, வட்டார செயலராக ப.கீதாமணி, பொருளாளராக சு.காளியப்பன், மாவட்ட பொதுக் குழு உறுப்பினராக எம்.சசிகுமாா் மற்றும் துணை நிா்வாகிகள், வட்டார செயற்குழு உறுப்பினா்கள் ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட நிா்வாகிகளுக்கு மாநில செயற்குழு உறுப்பினா் பிரபு, மாநில துணைத் தலைவா் ஜான்கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.