மின்மாற்றியில் கிடந்த இளைஞா் சடலம் மீட்பு

அவிநாசியில் மின்மாற்றியில் கிடந்த வட மாநில இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

அவிநாசியில் மின்மாற்றியில் கிடந்த வட மாநில இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

அவிநாசி அருகே உள்ள அவிநாசிலிங்கம்பாளையம் புறவழிச் சாலை பகுதியில் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியில் 28 வயது மிக்க இளைஞா் சடலம் கிடப்பதாக அவிநாசி போலீஸாருக்கு திங்கள்கிழமை காலை தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று இளைஞா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனா். விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டது, ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த லட்சுமணன் சிங் (28) என்பதும், தற்போது கோவை, சூலூா் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்துது. இது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com