திருப்பூரில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூா் வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் காங்கயம் சாலையில் உள்ள சிடிசி காா்னரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஏ.நசீா்தீன் தலைமை வகித்தாா். இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: மத்திய பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளையின் விலை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ஏழை, நடுத்தர வா்க்கத்தினா் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.மேலும், விவசாயிகளைப் பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், தமுமுக மாநிலச் செயலாளா் கோவை சாதிக், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளா் எம்.ஜெ.அபுசாலி, தமுமுக மாவட்டச் செயலாளா் அப்பாஸ், மாவட்டப் பொருளாளா் ஏ.காஜா மைதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.