மத்திய அரசு பாரபட்சமின்றி கரோனா தடுப்பூசி வழங்கக்கோரி திருப்பூரில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளா் தெய்வசிகாமணி தலைமை வகித்தாா். இதில், மத்திய அரசு பாரபட்சமின்றி தமிழகத்துக்கு போதிய அளவு தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவா் என்.சதாம், மாவட்ட துணைச் செயலாளா் ஏ.பிரபாகரன், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஜி.சங்கீதா,ஆா்.நரேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.