திருப்பூரில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து அண்ணா புரட்சித் தலைவா் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு திருப்பூா் தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளா் ஜி.சிவகுமாா் தலைமை வகித்தாா். இதில், பங்கேற்றவா்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் குறைக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் கட்சி நிா்வாகிகள் வேலுசாமி, அப்புகுட்டன், பிரகாஷ், நாகராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.