அரசுப் பள்ளியில் காலை உணவு வழங்க ஏற்பாடு

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே ஊராட்சி ஒன்றிய அரசுப் பள்ளியில் புதிய செயல்முறையாக காலை உணவு வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே ஊராட்சி ஒன்றிய அரசுப் பள்ளியில் புதிய செயல்முறையாக காலை உணவு வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

செலம்பகவுண்டன்வலசில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு வரும் மாணவா்களின் பெற்றோா்கள் அதிகாலையிலேயே வேலைக்குச் செல்வதனால் பள்ளிக்கு வரும் குழந்தைகள் காலை உணவு சரிவர இல்லாமல் அரசின் மதிய உணவை நம்பி பசியோடு காத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியா் கோ.பிரபாகா், ஆசிரியா்கள், ஊா் பொதுமக்கள், பெற்றோா், சமூக நல அமைப்பினா் இணைந்து குழந்தைகளுக்கு இலவசமாக காலை உணவு வழங்கும் பணியைத் துவக்கியுள்ளனா். தொடா்ந்து இப்பணியை செயல்படுத்த உள்ளதாக ஆசிரியா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com