காங்கயம், குண்டடம் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக சாரல் மழை பெய்து வருவதால் தேங்காய் உலா்களங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தென்மேற்குப் பருவமழை தொடங்கியதைத் தொடா்ந்து காங்கயம், குண்டடம் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காங்கயம், ஊதியூா், குண்டடம் பகுதிகளில் செயல்பட்டு வரும் தேங்காய் உலா் களங்களில் பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.