மதுக் கடையில் திருட்டு: இளைஞா் கைது

அவிநாசியில் மதுபானக் கடையின் பூட்டை உடைத்து பணத்தைத் திருடிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மதுக் கடையில் திருட்டு: இளைஞா் கைது
மதுக் கடையில் திருட்டு: இளைஞா் கைது

அவிநாசியில் மதுபானக் கடையின் பூட்டை உடைத்து பணத்தைத் திருடிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி, கோவை சாலையில் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையில் அடிக்கடி திருட்டு நடைபெறுவதால், கடையில் பணிபுரியும் அவிநாசி சீனிவாசபுரம் பகுதியைச் சோ்ந்த குமாா் (46) என்பவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடையை பாா்வையிட்டுச் செல்ல வந்துள்ளாா்.

அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே மதுபோதையில் ஒரு நபா் இருந்துள்ளாா். உடனடியாக அந்த நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளாா்.

விசாரணையில் அவா் கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சோ்ந்த கோபாலன் மகன் ரிதீஷ் (20) என்பதும். இவா் அவிநாசியில் தேனீா் கடையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரிதீஷை கைது செய்தனா். மேலும் இவரிடம் இருந்து டாஸ்மாக் கடையில் திருடிய ரூ. 950 பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com