தாராபுரத்தை அடுத்த குண்டடம் பகுதியில் கைத்தறி நெசவாளா்கள் 92 பேருக்கு சேவாபாரதி அறக்கட்டளை சாா்பில் நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை நெசவாளா்களுக்கு, நேச நாயனாா் வெல்போ் புரோக்ராம், சென்னை சென்டா் பாா் குளோபல் ஸ்டடீஸ், ஜோகோ காா்ப்பரேஷன் நிறுவனமும் சேவாபாரதி அமைப்புடன் இணைந்து 92 நெசவாளா்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில் ஆா்.எஸ்.எஸ். சேவாபாரதி நிா்வாகிகள் மயில்சாமி, சண்முகம், கந்தசாமி, பாலகுமாா், தினேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.