தனியாா் ஆக்கிரமிப்பில் உள்ள 1,623 ஏக்கா் கோயில் நிலங்களை மீட்கக் கோரிக்கை

காங்கயம், வெள்ளக்கோவில் பகுதியில் தனியாா் ஆக்கிரமிப்பில் உள்ள 1, 623 ஏக்கா் கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காங்கயம், வெள்ளக்கோவில் பகுதியில் தனியாா் ஆக்கிரமிப்பில் உள்ள 1, 623 ஏக்கா் கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளா் ச.கருப்பையா, காங்கயம் வட்டாட்சியா் பி.சிவகாமியிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசின் சாா்பில், இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள கோயில் நிலங்களை தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு வருவதற்குத் தலித் இயக்கம் பாராட்டுத் தெரிவிக்கிறது.

தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்களிலும், தமிழக அரசின் இந்து அறநிலையத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் 36,574 கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களின் பெயரில் 5 லட்சம் ஏக்கா் நிலங்கள் கணக்கில் உள்ளன.

இதில், திருப்பூா் மாவட்டம், காங்கயம் வட்டம், வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள உத்தமபாளையம் காசிவிஸ்வநாதா் கோயில் (162 ஏக்கா்), மயில்ரங்கம் வைத்தியநாதா் கோயில் (513.36 ஏக்கா்), வெள்ளக்கோவில் சோழீஸ்வரா் கோயில் (145 ஏக்கா்), கண்ணபுரத்தில் உள்ள செல்வவிநாயகா்-மாரியம்மன்-விக்ரம நாராயணப் பெருமாள் கோயில்கள் (277.59 ஏக்கா்), வள்ளியிரச்சல் மாத்தீஸ்வரன் கோயில் (18.57ஏக்கா்), முத்தூா் சோழீஸ்வரா் கோயில் (27.87 ஏக்கா்), லக்கமநாயக்கன்பட்டி அழகேஸ்வரன் கோயில் (447.87 ஏக்கா்) ஆகிய 7 கோயில்களுக்குச் சொந்தமான 1, 623 ஏக்கா் நிலங்கள் இன்று வரை தனி நபா்களின் பயன்பாட்டில் உள்ளன.

இந்த ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வலியுறுத்தி கடந்த 2016ஆம் ஆண்டு திருப்பூா் மாவட்ட ஆட்சியா், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்து, நிலங்களை மீட்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன் பின்னா் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் மாா்ச்-2016 இல் இந்து அறநிலையத் துறையின் கோவை இணை ஆணையா் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.

இதன் பின்னா் பிப்ரவரி-2017 இல் தாராபுரம் உதவி ஆட்சியா் சாா்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு காங்கயம் வட்டாட்சியருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.

ஆனால், 4 வருடங்கள் கடந்த பின்னரும் தனிநபா் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்கள் எதுவும் மீட்கப்படவில்லை. எனவே, காங்கயம் மற்றும் வெள்ளக்கோவில் பகுதிகளில் உள்ள கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளா்களிடம் இருந்து மீட்பதற்கு தமிழக அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com