வெள்ளக்கோவில் பகுதியில் 6 இடங்களில் கரோனா தடுப்பூசி வெள்ளிக்கிழமை (ஜூலை 23)செலுத்தப்படுகிறது.
சொரியங்கிணத்துப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 200 பேருக்கும், திருமங்கலம் ஆரம்பப் பள்ளியில் 110 பேருக்கும், வேலம்பாளையம் துவக்கப் பள்ளியில் 200 பேருக்கும், சக்கரபாளையம் துவக்கப் பள்ளியில் 100 பேருக்கும் முதல் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
தீத்தாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 150 பேருக்கும், கம்பளியம்பட்டி ஆரம்பப் பள்ளியில் 50 பேருக்கும் இரண்டாம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.