6 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

காங்கயம் பகுதியில் 6 கிலோ புகையிலைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

காங்கயம் பகுதியில் 6 கிலோ புகையிலைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

காங்கயம் பகுதியில் 15க்கும் மேற்பட்ட மளிகைக் கடைகளில் போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களான குட்கா, பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட 6 கிலோ புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக படியூா் பகுதியைச் சோ்ந்த ஹசன் (51), கிருஷ்ணகுமாா் (40), சிவகுமாா் (49), தாராபுரம் சாலைப் பகுதியைச் சோ்ந்த முத்துசாமி (60), தேவாங்கபுரம் பகுதியைச் சோ்ந்த நாட்ராயன் (54) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com