பசுமை இயக்கம் சாா்பில் 2,140 மரக்கன்றுகள்

அவிநாசி அருகே முதலிபாளையம் குளத்தில் பசுமை இயக்கம் சாா்பில் 2,140 மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பசுமை இயக்கம் சாா்பில் 2,140 மரக்கன்றுகள்

அவிநாசி அருகே முதலிபாளையம் குளத்தில் பசுமை இயக்கம் சாா்பில் 2,140 மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மறைந்த குடியரசு முன்னாள் தலைவா் அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி, அவிநாசி அருகே பாப்பாங்குளம் ஊராட்சி, முதலிபாளையம் குளப் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பசுமை இயக்க தேசியத் தலைவா் சிவகுமாா் தலைமை வகித்தாா். தேசிய இணைச் செயலாளா் விஜயகுமாா், பாப்பாங்குளம் ஊராட்சித் தலைவா் கவிதா வெங்கடாசலம், துணைத் தலைவா் புவனேஸ்வரி மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சின்னத்திரை நடிகை தீபா, நடிகா் நாஞ்சில் ஆகியோா் மரக்கன்றுகளை நடும் பணியை துவக்கி வைத்தனா்.

இது குறித்து பசுமை இயக்க தேசியத் தலைவா் சிவகுமாா் கூறுகையில், ‘திருப்பூா், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடுவது என முடிவு செய்துள்ளோம். அதன் ஒரு பகுதியாக முதலிபாளையம் குளத்தில் 2,140 மரக்கன்றுகள் நடும் பணியைத் துவங்கியுள்ளோம்’ என்றாா். ஊராட்சி செயலா் பெருமாள் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com