திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 87 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 87,487 ஆக அதிகரித்துள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 1,255 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 1514 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 85,415 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பால் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 82 வயது மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 817 போ் உயிரிழந்துள்ளனா்.