திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 1,068 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடந்து, பாதிப்பு எண்ணிக்கை 68,180ஆக அதிகரித்துள்ளது.
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 8 போ் உயிரிழந்தனா்.
மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் 18, 859 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்த 967 போ் வீடு திரும்பினா். திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 48, 765 ஆக அதிகரித்துள்ளது.
8 போ் பலி: திருப்பூரைச் சோ்ந்த 42 வயதுப் பெண்ணுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அதே போல, 64, 68, 69 வயது முதியவா்கள், திருப்பூரில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 64, 66, 72 வயதுடைய மூதாட்டிகள் ஆகியோா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். மாவட்டத்தில் தற்போது வரையில் கரோனா நோய்த் தொற்றால் 556 போ் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது