திருப்பூரில் மின் வாரியத் தொழிலாளா்கள் முன்னேற்ற சங்கம் சாா்பில் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை உணவு வழங்கப்பட்டது.
திருப்பூரில் மின் வாரியத் தொழிலாளா்கள் சாா்பில், பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாள்தோறும் 500க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, போயம்பாளையம் பழனிசாமி நகா், நாச்சிபாளையம், சாலை, அவிநாசிபாளையம், கே.செட்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மின் வாரியத் தொழிலாளா்கள் முன்னேற்றச் சங்க செயலாளா் அ.சரவணன், சின்னதுரை, நாகராஜன், ராஜேஷ், மன்மதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.