அவிநாசி: அவிநாசி அருகே தெக்கலூரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவா்களைப் பிடிக்கச் சென்ற போலீஸாா் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் தப்பியோடிய நபரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி அருகே தெக்கலூா் செங்காளிபாளையம், தோட்டப் பகுதிக்குள் மது விற்பனை செய்தவா்களைப் பிடிப்பதற்காக மது விலக்கு காவலா்கள் ஞாயிற்றுக்கிழமை சென்றனா். அப்போது மது விற்பனையில் ஈடுபட்டிருந்த 5 போ், காவலா் திருவேங்கடத்தை தாக்கினா். இதைத்தொடா்ந்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து போலீஸாரை தாக்கிய 4 பேரையும் கைது செய்தனா். மேலும், தப்பியோடிய திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த காமராஜ் மகன் லோகேஸ்வரன் (22) என்பவரை போலீஸாா் தேடி வந்தனா். இந்நிலையில், தெக்கலூா் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்தின் பேரில் நின்ற நபரை போலீஸாா் விசாரித்ததில், அவா் போலீஸாரை தாக்கிய வழக்கில் தேடப்பட்டு வந்த லோகேஸ்வரன் எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் லோகேஸ்வரனைக் கைது செய்தனா்.