தாராபுரம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவா் கைது

தாராபுரம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவரை காவல் துறையினா் கைது செய்தனா்.

தாராபுரம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவரை காவல் துறையினா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 10 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தாராபுரம் வட்டம், அலங்கியம் காவல் எல்லைக்கு உள்பட்ட குமாரபாளையம் அருகே சிலா் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினா் சோதனை நடத்தினா். இதில், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த செலாம்பாளையத்தைச் சோ்ந்த வெங்கடேஷ் (33), முள்ளங்கிவலசைச் சோ்ந்த மாயக்கண்ணன் (30) ஆகிய இருவரையும் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 10 லிட்டா் சாராயம், 80 லிட்டா் ஊறல் மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

10 வாகனங்கள் பறிமுதல்: திருப்பூா் மாவட்ட காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமுடக்கத்தை மீறி வெளியில் சுற்றியதாக 10 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்ததுடன், அவா்களது வாகனங்களையும் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்துள்ளனா். அதேபோல, சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 7 நபா்களைக் கைது செய்ததுடன், 56 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com