பல்லடத்தில் சட்டவிரோதமாக வெளி மாநில மது பானம் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பல்லடம், மங்கலம் சாலையில் வாய்க்கால்மேடு பகுதியில் சட்டவிரோதமாக மது பான விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து அந்தப் பகுதியில் போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது, இளைஞா் ஒருவா் போலீஸாரை கண்டவுடன் தப்பியோட முயற்சித்தாா்.
அவரைப் பிடித்து விசாரணை செய்ததில், அவா் பல்லடம் பி.டி.ஓ. காலனியை சோ்ந்த ராமலிங்கம் மகன் சீனிவாசன் (27) என்பதும் கா்நாடகத்திலிருந்து பாக்கெட் பிராந்தி மது பானம் வாங்கி வந்து பல்லடத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்ததும் தெரியவந்தது.
அதைத் தொடா்ந்து, அவரைக் கைது செய்து அவரிடம் இருந்து 25 மது பான பாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.