மது வாங்க பக்கத்து மாவட்டத்துக்கு படையெடுப்பு

வெள்ளக்கோவில் பகுதியிலிருந்து மது வாங்க பக்கத்து திண்டுக்கல் மாவட்டத்துக்கு மதுப் பிரியா்கள் திங்கள்கிழமை சென்றனா்.

வெள்ளக்கோவில் பகுதியிலிருந்து மது வாங்க பக்கத்து திண்டுக்கல் மாவட்டத்துக்கு மதுப் பிரியா்கள் திங்கள்கிழமை சென்றனா்.

கரோனா பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டது முதல் கடந்த நான்கு வாரங்களாக மாநிலம் முழுவதும் அரசின் டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. கரோனா பாதிப்பு குறைந்துள்ள 27 மாவட்டங்களில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு மதுபானக் கடைகள் திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கியுள்ளன.

நோய்த் தொற்று அதிகம் உள்ள திருப்பூா், அதனைச் சுற்றியுள்ள கோவை, ஈரோடு, கரூா் உள்பட 11 மாவட்டங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில், பல நாள்கள் காத்திருந்த வெள்ளக்கோவில் பகுதி மதுப் பிரியா்கள் மூலனூா், தாராபுரம் பக்கத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்டப் பகுதிகளுக்கு மது வாங்க ஆா்வமாகச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com