திருப்பூா் மாவட்டத்தில் ஆவின் பால் விலை குறைப்பு காரணமாக கடந்த ஒரு மாதத்தில் ரூ.2.16 கோடிக்கு ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் ஆவின் பால் விற்பனை விலையானது கடந்த மே 16 ஆம் தேதி முதல் ரூ.3 குறைக்கப்பட்டது. இதன்படி நிலைப்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டா் ரூ. 44க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதன்படி மாவட்டத்தில் மே 16 ஆம் தேதி முதல் ஜூன் 16 ஆம் தேதி வரையில் ஒரு மாதத்தில் ரூ.2.16 கோடிக்கு ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு காரணமாக ஆவின் பால் விற்பனையானது 9 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.