வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஜூலை 1 முதல் பருத்தி ஏலம் நடைபெற உள்ளது.
இது தொடா்பாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சிவக்குமாா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
மூலனூா் விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏல விற்பனை நடைபெற்று வந்தது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 6 வாரங்களாக ஏலம் ரத்து செய்யப்பட்டது.
தற்போது பருத்தி வரத்து துவங்கியுள்ளதால், அரசின் அனுமதியுடன் நோய்த் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி வரும் ஜூலை 1 முதல் வாரந்தோறும் தொடா்ந்து விற்பனை நடைபெற உள்ளது. இதில் விவசாயிகளும், வியாபாரிகளும் பங்கேற்றுப் பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.