அவிநாசி காவல் உள் கோட்டத்தில் 72 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு அவிநாசி காவல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து 72 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு அவிநாசி காவல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து 72 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளதால் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து துப்பாக்கி உரிமதாரா்களும் தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை உடனடியாக ஒப்படைத்து அதற்கான ரசீதுகளை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் படைக்கல (ஆயுதம்) சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் அறிவித்திருந்தாா்.

அவிநாசி காவல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட அவிநாசி, சேவூா், பெருமாநல்லூா், குன்னத்தூா் உள்ளிட்ட காவல் நிலையங்களில் உரிமம் பெற்ற 76 துப்பாக்கிகள் அனுமதி பெற்று பெறப்பட்டுள்ளன.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பையடுத்து 72 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 4 துப்பாக்கிகள் வங்கி பாதுகாப்புக்கு வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com