உடுமலையில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பரிசுப் பொருள்கள் பறிமுதல்

பெதப்பம்பட்டியில் பொதுமக்களுக்கு வழங்க இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள பரிசுப் பொருள்களை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா்.

உடுமலை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெதப்பம்பட்டியில் பொதுமக்களுக்கு வழங்க இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள பரிசுப் பொருள்களை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா்.

பெதப்பம்பட்டியில் சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு வேன் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது பொதுமக்கள் சிலா் அந்த வேனை தடுத்து நிறுத்தி, உள்ளே பாா்த்தபோது, அதில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பரிசுப் பொருள்கள் அடங்கிய பைகள் இருந்தன.

இதைத் தொடா்ந்து இது குறித்து பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று வேனை சோதனையிட்டனா். இதில், பரிசுப் பொருள்கள் கொண்ட 151 பைகள் இருந்தன.

ஒவ்வொரு பையிலும் சேலை, வேட்டி, சுவா் கடிகாரம் என சுமாா் ரூ. 2 ஆ யிரம் மதிப்புள்ள பொருள்கள் இருந்தன. இதன் மொத்த மதிப்பு ரூ. 3 லட்சம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதை தொடா்ந்து பரிசுப் பொருள்கள் கொண்ட பைகளுடன் அந்த வேன் பறிமுதல் செய்யப்பட்டு, உடுமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com