வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் மளிகைக் கடைக்காரா் உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில் - தாராபுரம் சாலை, சிவநாதபுரம் புதுக்காட்டைச் சோ்ந்தவா் ஞானப்பிரகாசம் மகன் லிப்சன் (36). இவா் அப்பகுதியில் மளிகைக் கடை வைத்துள்ளாா். காய்கறி வாங்குவதற்காக ஆம்னி வேனில் திருப்பூா் காய்கறிச் சந்தைக்குச் சென்றுள்ளாா்.
வெள்ளக்கோவில் - காங்கயம் சாலை இரட்டைக்கிணறு அருகே சென்றபோது முன்னால் வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற டிராக்டா் மீது ஆம்னி வேன் மோதியது.
இதில் ஆம்னி வேன் ஓட்டுநா் அருகில் அமா்ந்திருந்த லிப்சன் படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.